“ஒவ்வொரு பெரிய ‘அதிர்ஷ்டத்திற்கும்’ பின்னாலும் ஒரு குற்றம் இருக்கும்” என பிரெஞ்சு நாவலாசிரியர் ஹனோரே டி பால்சாக் குறிப்பிடுகிறார். அதிக வருமானமும் சொத்துக்குவிப்பும் கடுமையான குற்றங்களை பின்னணியாகக் கொண்டவை என்பதை கவனித்தால் அவர் கூற்றின் முழு உண்மை புரியும்.
சொத்துக் குவிப்பை எளிதாக்கும் மெகா திட்டங்கள்
2019 -23 ஆண்டுக்கான உலகளாவிய ‘காலப்’ கருத்துக்கணிப்பு (Gallup World Poll) முடிவுகள் மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) நுகர்வோர் பரவல் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படைகளும் இதை நிரூபிக்கின்றன. வருமான சமத்துவமின்மை அரசாங்கத்தின் பரிவர்த்தனை களில் ஊழலை வளர்க்கிறது. பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க தனியார் முதலீட்டாளர்களால் கட்டப்படும் மெகா உள்கட்டமைப்பு திட்டங்கள் - நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், பாலங்கள் ஆகியவை தொடர்பான வணிக ஒப்பந்தங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஒரு முறை பணத்தின் ருசியைக் கண்டுவிட்டால் ஊழலுக்காக சட்டங்களை வளைப்பதில் எந்த ஒரு நெருடலும் ஏற்படுவதில்லை. பங்குச் சந்தையை கையாளுதல், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்க ளுக்கான ஒப்பந்தங்களைப் பெறுதல், நாடு கடந்து லாபத்தை கடத்திச் செல்வது போன்றவை மூலம் செல்வக்குவிப்பு மேலும் எளிதாகிறது.
கடந்த சில ஆண்டுகளில்,குறிப்பாக 2014 இல் இருந்து 2022 வரையில், சொத்துக்குவிப்பு மற்றும் வருமான சமத்துவமின்மை இந்தியாவில் வியக்கத் தக்க வகையில் அதிகரித்திருப்பதாக பிரபல பொரு ளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி மற்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் மேலான சொத்துக்கள் ஒரு சதவீதத்தினரிடம் குவிந்துள்ளன. (1980இல் 12.5% ஆக இருந்தது.) இன்று வரிவிதிப்பு க்கு முந்தைய மதிப்பு அடிப்படையில் 22.6 சதவீத வருமானம் வெறும் ஒரு சதவீதத்தினரிடம் குவிந்துள்ளது. (1980 களில் இது 7.3 சதவீதமாக இருந்தது) உலகில் தற்போது சமத்துவமின்மை அதிக மான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது.
ஊழலைக் கணிப்பது எப்படி?
ஊழல் என்பது தனியார் ஆதாயத்திற்காக அரசுத் துறைகளை பயன்படுத்துவதாக வரையறுக்கப்படு கிறது. தனியார் வணிகத்துக்குள் நிகழும் ஊழலை இது கணக்கில் எடுப்பதில்லை. பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிர்வாகிகள் தனிப்பட்ட லாபத் திற்காக பொது வளங்களை பயன்படுத்துவது ஊழலில் பொதுவான விரிந்த வரையறையாக எடுத்துக் கொள் ளப்பட்டது. கேலப் ஆய்வின்படி ஊழல் பரவலாக உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று வந்தால் ஒரு புள்ளி என கணக்கிடப்படும். இப்படி கேட்கப்படும் கேள்விகளின் அடிப்படையில் புள்ளிகள் அதி கரிக்கும்.
மூன்று வகையான ஊழல்
ஊழலில் மூன்று வெளிப்பாடுகள் உள்ளன. அர சாங்கத்தில் நடைபெறுவது, வணிகத்தில் நடை பெறுவது, அரசாங்கத்திற்கும் வணிகத்திற்கும் இடையி லான பரிவர்த்தனையில் நடைபெறுவது. இந்தச் சூழலில் சமத்துவமின்மை மற்றும் ஊழலுக்கு இடையே யான உறவை கணக்கிடுவதில் கவனம் செலுத்துகி றோம். (உதாரணத்திற்கு துறைமுகங்களை நிர்மா ணிக்க அரசாங்கம் ஒப்பந்தங்களை இறுதியாக்கும் போது பணக்கார முதலீட்டாளர்கள் ஆதாயம் பெறும் வகையில் நடைபெறும் ஊழல்.)
உலகமயமாக்கலைத் தொடர்ந்து இயற்கை வளங்கள் மிகவும் மதிப்பு மிக்கதாக மாறிய சூழ்நிலை யில் ஊழல்கள் மேலும் அதிகரித்துள்ளன. மேலும் அவற்றின் ஒதுக்கீட்டிற்கு உரிமம் வழங்கும் ஒழுங்கு முறை நிறுவனங்களிலும் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சக்தி வாய்ந்த வணிக நலன்களும் நேர்மையற்ற அதிகாரிகளும் இதை நிறைவேற்றும் கருவிகள் ஆகின்றன.
தோல்வியடைந்த “மேக் இன் இந்தியா”
இந்தப் பின்னணியில் தான் உற்பத்தி, அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற மெகா பொருளாதார குறிகாட்டிகள் எதுவும் அதிகாரிக்காததால் மோடி அரசின் “மேக் இன் இந்தியா” திட்டம் சொதப்பல் ஆகியுள்ளது. இறக்கும திக் கட்டணங்கள் அதிகரித்ததும், வரி வருவாய் இனங்கள் குறைந்ததும் இந்தத் திட்டத்தை படுதோல்வி அடையச் செய்துள்ளன.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் வியப்பில்லை
இதன் பொருள் என்னவென்றால் பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க முதலீட்டர்கள் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் தங்களது லாப வேட்டையை அதிகரித்தனர் என்பதுதான். அதே நேரத்தில் லாபத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சமூக நன்மை யை புறக்கணித்தனர். அதற்குரிய வழிமுறைக ளும் இதில் எளிதாகின்றன. இயற்கை வளங்கள் மிக வேகமாகச் சூறையாடப்படுகின்றன. இந்த நிறுவனங் கள் புதிதாக எந்த வளங்களையும் உருவாக்குவ தில்லை. மாறாக அவர்களின் லாபத்தை எப்படி அதி கரிக்க முடியும் என்பதில் தான் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்கின்றன.
2014 -22 காலகட்டத்தில், அதாவது மோடியின் ஆட்சியின் போது அரசாங்கம் மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு இடையே பரிவர்த்தனை தீவிரமாக இருந்த தால் இத்தகைய லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
அதானி குழுமத்தின் கடல் தாண்டிய நிதி பரிவர்த்த னையில் செபியின் தலைவர் மற்றும் அவருடைய கண வரின் தொடர்பு பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை இதை நிரூபிக்கிறது. வழக்கும் விசாரணையும் தொடர ‘செபி’ செய்யும் தாமதமும் இதை உறுதி செய்கிறது. மேலும் நம் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள தீவிர மான நோயின் அறிகுறியையும் இது சுட்டிக்காட்டு கிறது.
ஊக முதலீடுகள் (vs) சேமிப்புகள்
வருமான சமத்துவமின்மை பெரும்பாலும் (பரஸ்பர நிதி போன்ற) ஊக முதலீடுகளால் தூண்டப் படுகிறது. மாறாக நிரந்தர வைப்பு நிதிகள் மற்றும் அஞ்சலகச் சேமிப்புகள், சேமிப்பை அதிகரிப்பது மட்டுமல்ல, பொருளாதாரத்தை நிலைப்படுத்துபவை.
பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை ஒன்றிய பட்ஜெட் தவறவிட்டு உள்ளது. ஒழுங்குமுறை ஆணையங்களை வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றச் செய்து சமூகப் பொறுப்பிற்கு அதனை உட்படுத்துவது என்பது மிகுந்த கடினமான பணியாக இன்று மாறி வருகிறது. அதிக போட்டித் தன்மையை கொண்ட அரசியல் சூழ்நிலை யும் தனியார் வணிக நலன்களும் கடினமான சவால்க ளை ஒரே நேரத்தில் ஏற்படுத்துகின்றன. இவற்றை ஒரு சேர சமாளித்து முறியடிப்பது மட்டுமே இந்தியாவை முன்னேற்றுவதற்கான சிறந்த வழியாகும்.
கட்டுரையாளர்கள்: பேரா.நிதி கைக்கர், தில்லியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை உதவிப் பேராசிரியராக உள்ளார்.
பேரா.வாணி எஸ். குல்கர்னி சமூகவியல் இணைப் பேராசிரியர், ஆர்கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஜோன்ஸ்ப்ரோ, அமெரிக்கா ராகவ் கைஹா ஒரு ஆராய்ச்சியாளர், மக்கள்தொகை ஆராய்ச்சி மையம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிலடெல்பியா, அமெரிக்கா.
தி இந்து 20/8/24.
தமிழில் : கடலூர் சுகுமாரன்